ஆண்டிபட்டி வைகை குரும்பபட்டி கோகுலகிருஷ்ணன் கோவில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா 2026
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை குரும்பபட்டி கோகுலகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா சிறப்பு அலங்கார பூஜை, சிறுவர்-சிறுமிகளின் கிருஷ்ணர்-ராதை வேடமணிந்த வழிபாட்டுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் கோகுலகிருஷ்ணன்:
கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு, அதிகாலை முதலே கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ன. தொடர்ந்து, மூலவர் கோகுலகிருஷ்ணன் கண்ணைக் கவரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணர் - ராதை வேடத்தில் அசத்திய குழந்தைகள்:
விழாவின் முக்கிய நிகழ்வாக, வைகை குரும்பபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களுக்குக் கிருஷ்ணர் வேடமும், சிறுமிகளுக்கு ராதை வேடமும் அணிவித்து கோவிலுக்கு அழைத்து வந்தனர். சிறு குழந்தைகளின் இந்த வண்ணமயமான வேடமணிந்த வருகை விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பெரிதும் கவர்ந்தது.
பரிசுகள் மற்றும் அன்னதானம்:
விழாவில் பங்கேற்று கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு அசத்திய சிறுவர், சிறுமியர்களுக்கு கிராமக் குழுவினர் சார்பில் சிறப்புப் பரிசுகள் வழங்கிப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
பூஜையின் நிறைவில், கிருஷ்ணருக்குப் பிடித்தமான நிவேதனப் பிரசாதங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, விழாவில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. கிராம மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு இந்த கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.


