தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் பிரியாவிற்கு 'வெளிச்சம் அறக்கட்டளை' பாராட்டு!
"மனிதநேயத்துடன் உயிர் காக்கும் சேவையாற்றி வரும் மருத்துவருக்குச் சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கப்பட்டது."
தேனி - க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரத்த வங்கிப் பிசரிவில் (Blood Bank Department) பணியாற்றி வரும் மனிதநேய மருத்துவர் திருமதி. பிரியா (MBBS., DCP) அவர்களின் மருத்துவச் சேவையைப் பாராட்டி, வெளிச்சம் அறக்கட்டளை சார்பாகச் சிறப்பான பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.
இரத்த வங்கி பிரிவில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, பல மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள மருத்துவர் பிரியா அவர்களின் சேவையை கௌரவிக்கும் விதமாக, இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.
நிகழ்வின் போது, வெளிச்சம் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சென்று மருத்துவர் அவர்களுக்குச் சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
பொதுமக்களின் உயிர் காக்கும் பணியில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் இதுபோன்ற சேவைகள், சமூகத்தில் உள்ள பலருக்கும் ஈர்க்கக்கூடிய ஒரு முன்மாதிரியாக அமைகிறது என அறக்கட்டளை நிர்வாகிகள் இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

