தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக மரு.இரா.வைத்திநாதன் இ.ஆ.ப. பொறுப்பேற்பு!
தேனி: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (31.05.2026) மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்
புதிய மாவட்ட ஆட்சியர் மரு.இரா.வைத்திநாதன் இ.ஆ.ப. அவர்களின் பணி அனுபவம்:
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) மூலம் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இவரது பணி அனுபவங்களின் பட்டியல் இதோ:
"தேனி மாவட்ட புதிய ஆட்சித்தலைவர்', 'சேலம் மாவட்டம்: உதவி ஆட்சியர் (பயிற்சி)
தேனி & கோயம்புத்தூர்: சார் ஆட்சியர் (தேனி உத்தமபாளையம் வருவாய் கோட்டம் மற்றும் பொள்ளாச்சி வருவாய் கோட்டம்)
"மரு.இரா.வைத்திநாதன் இ.ஆ.ப', '
தர்மபுரி மாவட்டம்: கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)
திருச்சிராப்பள்ளி மாவட்டம்: மாநகராட்சி ஆணையர்
சென்னை: செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் இயக்குநர்
தேனி மாவட்டத்தின் உத்தமபாளையத்தில் ஏற்கனவே சார் ஆட்சியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால், மாவட்டத்தின் தேவைகளை அறிந்து சிறந்த முறையில் பணியாற்றுவார் என உள்ளூர் மக்கள் தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதுவரை பணியாற்றி வந்த மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், ஊரக கட்டமைப்பு நிதி சேவை துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்
"தேனி மாவட்டத்தின் உடனுக்குடனான செய்திகளை உங்கள் வாட்ஸ்அப்பில் பெற இங்கே கிளிக் செய்து நமது அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள்!"
https://chat.whatsapp.com/B6GlAJSKd360ov853Jjlk7

